காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம்
காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம்.
இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் உங்கள் வீடு தேடி வரும். போலீசார் இல்லாத நிலையில் பாலத்தில் முதல் கட்டமாக பத்து சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதனால் போலீசார் இல்லை என்று வேடிக்கை பார்க்க கார் கதவை திறந்தாலே கேமரா உங்களை படம் பிடித்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.