உலக பெற்றோர் தினம்
உலக பெற்றோர் தினம் -24.7.2022.
உதிரத்தில் சுமந்த தந்தை,
உதரத்தில் 10 மாதம் சுமந்து
உயிர் கொடுத்து உடல் வளர்த்து உலகிற்கு தந்த தாய் – நமக்கு
உதிரப் பாலூட்டி உறுபசி தீர்த்து ,
உறங்கையிலும் விழித்திருந்து
உருவாக்கிய உத்தமியாம் .
உலகை நமக்குணர்த்தி ,நம்
உயர்வே குறிக்கோளாய்
உயரங்கள் எட்டிடவே
உழைத்து வளர்த்தார் தந்தை .
உற்றார் ,உறவினர் மற்றும்
உற்ற நண்பர்கள் என்று பல
உறவுகள் இருந்திடினும் – அதனில்
உயர்ந்த உறவு பெற்றோர்தானே.
உலகைக் காக்கும் கடவுள் போல்
உடனிருந்துகாப்போர்பெற்றோர்தானே.
உயர்வு காணும் பொழுது
உற்சாகம் கொள்வதும்
உறுதுயர் தன்னில் நமக்கு
உறுதுணையாவது பெற்றோர்தானே.
உயிர்மூச்சுள்ளவரை அவர்கள்மீது
உயர்ந்த அன்பும் , மரியாதையும்
உண்மையான அக்கறையும் வைத்து
உள்ளம் உவந்து அவர்களது
உள்ளம் வாடாமல் காத்தலே
உரியதொரு நன்றிக்கடன் – நம்
உள்ளத்தில் நிறுத்திடுவோம்.
உத்தமப் பிள்ளைகளென
உலகோர் போற்றிடவே.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.