உலக பெற்றோர் தினம்

Vinkmag ad

உலக பெற்றோர் தினம் -24.7.2022.

உதிரத்தில் சுமந்த தந்தை,

உதரத்தில் 10 மாதம் சுமந்து 

உயிர் கொடுத்து உடல் வளர்த்து உலகிற்கு தந்த  தாய் – நமக்கு 

உதிரப்  பாலூட்டி உறுபசி தீர்த்து ,

உறங்கையிலும் விழித்திருந்து 

உருவாக்கிய உத்தமியாம் .

உலகை நமக்குணர்த்தி ,நம்

உயர்வே குறிக்கோளாய் 

உயரங்கள் எட்டிடவே 

உழைத்து வளர்த்தார் தந்தை .

உற்றார் ,உறவினர் மற்றும்

உற்ற நண்பர்கள் என்று பல 

உறவுகள் இருந்திடினும் – அதனில் 

உயர்ந்த உறவு பெற்றோர்தானே. 

உலகைக் காக்கும் கடவுள் போல்

உடனிருந்துகாப்போர்பெற்றோர்தானே. 

உயர்வு காணும் பொழுது 

உற்சாகம் கொள்வதும் 

உறுதுயர் தன்னில் நமக்கு 

உறுதுணையாவது பெற்றோர்தானே. 

உயிர்மூச்சுள்ளவரை அவர்கள்மீது 

உயர்ந்த அன்பும் , மரியாதையும் 

உண்மையான அக்கறையும் வைத்து

உள்ளம் உவந்து அவர்களது 

உள்ளம் வாடாமல் காத்தலே 

உரியதொரு நன்றிக்கடன் – நம்

உள்ளத்தில் நிறுத்திடுவோம். 

உத்தமப் பிள்ளைகளென 

உலகோர் போற்றிடவே. 

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

Read Next

தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022

Leave a Reply

Your email address will not be published.