கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் மறைவு!

Vinkmag ad

sirkaliகவிஞர் திலகம்
சீர்காழி இறையன்பனார் மறைவு!
———————————————————
இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச் சீர்காழி மண்டலப் பொறுப்பாளரும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணிச் செயல் வீரரும், முதுபெரும் கவிஞரும், எழுத்தாளருமான கவிமாமணி, கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் பஷீர் அஹமது  இன்று 30-03-2020 அதிகாலை சீர்காழி புத்ததூரில் வபாத்தானார் …
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) … அன்னாரது நல்லடக்கம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் புத்தூர் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறவுள்ளது.

நிறைந்த  பண்பாளர், தெளிந்த சிந்தனையாளர், தேர்ந்த கட்டுரையாளர், சிறந்த கவிஞர் , ஆற்றல்மிகு பத்திரிகையாளர், வலிமைமிகு செயல்வீரர் சீர்காழி இறையன்பனார் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் அவர்தம் மண்ணறையைச் சுவனப் பூங்காவாக்கி மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை அருள இருகரமேந்தித் துஆ செய்கிறோம்.

-பேராசிரியர் சேமுமு. முகமதலி,
தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்.
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் கொண்டு இயக்கம்.
ஆசிரியர்,
‘இனிய திசைகள்’மாத இதழ்.

News

Read Previous

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

Read Next

தமிழ் கற்றுக் கொள்ள உதவும் நூல் மற்றும் இணையத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *