விறகாய் எரியும் வீணைகள் !

Vinkmag ad

 

_ திருமலர் மீரான் –

 

இந்தியாவில் அதிகமாக

மழை பொழியும் இடம்

சிராப் பூஞ்சியா? இல்லை

முதிர்க் கன்னிகள் வாழும்

ஏழை இல்லங்கள் !

 

அன்று முல்லை படர

தேரையே கொடுத்தான்

அவன் பாரி !

இன்று பூவை படர

ஏக்கர் லாக்கர் குக்கர்

கார் ரெப்ரிஜிரேட்டர் என

ஊரையே கேட்கிறான்

இவனோ விய பாரி !

 

மயிர் உதிர்ந்ததற்காக

மானம் போனதாக

உயிர் விட்ட மான்கள்

காட்டில் வாழ்ந்தன !

வருமானத்திற்காக

தன் மானம் விற்கும்

மருமான்களோ

வீட்டில் வாழ்கின்றன !

 

தகை கணவர்களுக்கு

பகை பீடித்ததால்

நகை ஓவியங்கள்

புகையுண்டு போயின !

 

இன்றைய மருமான்கள்

மகளுகாக அப்பா

வாங்கி நல்கும்

தட்டு முட்டுச் சாமான்கள் !

 

திருமணத்திற்கு முன்னர்

வளைய வளைய வந்தவர்கள்

வரதட்சணை நோய் வர

வளைக் கரத்தை வளைக்கின்றனர்

 

திருமண தினத்தில்

மணப்பெண் புன்னகையுடன்

கணவனை நோக்குவாள்

அவனது கண்களோ

பொன்னகையை நோக்கும் !

 

நவீனக் கணவர்கள்

நல்ல கணக்கர்கள்

கலியாணத் தினத்தன்று

கன்னியின் கழுத்தில்

கிடக்கும் ஆபரணங்களை

கச்சிதமாய் கணக்கெடுப்பர் !

 

விலைக்கு வாங்கப்பட்டவர்கள்

மீட்டாத காரணத்தால்

வீட்டு வீணைகள்

வீணாய் கிடக்கின்றன !

விறகாய் எரிகின்றன !!

News

Read Previous

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

Read Next

பிரியாவிடை

Leave a Reply

Your email address will not be published.