விண்ணைத் தாண்டி வருவாயா வெண்ணிலவே?
கால்பந்து உண்டெனினும்
கார்மேகக் கூந்தலால்
கவர்ந்திழுக்கும் பெண்ணிலவே
உன்னைத்தான் என்னோடு
விளையாட அழைக்கின்றேன்!
விண்ணைத் தாண்டி
விரல்களின் நுனியில்
வெண்ணிலா விரைகவே
விளையாட நானுண்டு!
நிலவினைப் பிடித்து
நிலமகள் இடத்திலே
உலாவர உதவிடும்
உரிமையில் கனவு
மட்டும் தானென
மனத்தினில் வளர்த்தேன்
எட்டும் வரைக்கும்
எட்டியே பிடிப்பதாய்
நினைத்ததைப் பிடித்தது
நிழற்படம்
வனைந்தனன் அதனை
வண்ணத் தமிழால்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி