விஜய்

Vinkmag ad
விஜய்
================================================ருத்ரா
திரைப்படங்களின்
நிழல்களுக்குள்
மக்களின் ரத்த ஓட்டங்கள்
சூடேறுவது
ஒரு சமுதாய ஆபாசம் என்றே
சிந்தனையாளர் சிந்திக்கிறார்கள்.
மக்கள்
ஒரு கூட்டமாக இல்லாமல்
தனி மனித மலர்ச்சிகளின்
தொகுப்பாக உருவாகுவதே
பரிணாம இயலின் சிகரம் எனலாம்.
மேலை நாடுகள்
அந்த மலையின் உச்சியை நோக்கி
சென்று கொண்டிருக்கின்றனவா
இல்லையா
என்பதும் கேள்வி நிலையில் தான்
உள்ளது.
எம் ஜி ஆர் தொடங்கி
ஜெயலலிதா உள்ளிட்டு
இந்த அரிதார அலப்பறைகள்
மக்களை
மந்தைகளாகத்தான்
மிச்சப்ப்டுத்தி இருக்கின்றன.
நம் நாட்டில்
சாதிகளும் மதங்களும்
இந்த மக்களை
மானுடம் என்பதன் ஒட்டுதலே
இல்லாத‌
வறட்டு அச்சுகளில் தான்
ஊற்றி வார்க்கின்றன‌
என்பதே
நம் நீண்ட வரலாறு.
அந்த மலைப்பாம்பின் விழுங்கலில்
மனிதத்தன்மையின்
எலும்புகள் எல்லாம்
நொறுங்கித்தான் கிடக்கின்றன.
இந்த லேசர் லைட்
சாக்கடை மழையில்
ரஜனி என்ன?
விஜய் என்ன?
எல்லாருமே
மக்களுக்கு வேடிக்கை காட்ட வந்தவர்களாய்
மக்களை வேதனைகளின் வாடிக்கைகளில்
வாட்டி வதக்கி
உப்புக்கண்டம் போடுபவர்களாகத்தான்
இருக்கிறார்கள்.
இந்த இருட்டு
எப்போது ஒளியால்
கீறப்படப்போகிறது?
விடியல் வெகு தூரம் இல்லை என்று
நம்புவோமாக!

News

Read Previous

நூல் விமர்சனம்

Read Next

தாய்மொழிக்கு நிகர் ஏது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *