வாழ்வினையே நடு !
வாழ்வினையே நடு !
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
அன்பைநடு அறிவைநடு
ஆணவத்தை அகற்று
இன்பைநடு ஈகையைநடு
எண்ணமதை திருத்து
உண்மைநடு உழைப்புநடு
ஊழலினை விரட்டு
உன்மனதில் இலட்சியத்தை
ஊன்றிநின்று நடு !
இலக்கியத்தை என்னாளும்
இங்கிதமாய் நடு
நிலத்திலுள்ள மாந்தரிடம்
நிம்மதியை நடு
உனக்குதவி செய்வாரை
உள்ளமதில் நடு
உண்மையது யாவருக்கும்
உதவுமென்று நடு !
களவுதனைக் கழைந்துவிட்டு
கண்ணியத்தை நடு
காதலுடன் வாழ்வெலாம்
கல்விதனை நடு
கடவுள்பற்றி நினைக்கின்ற
கருத்தினையும் நடு
கண்களிலே என்னாளும்
கருணையையும் நடு !
பிறர்தம்மை நோகாவிடா
பெருமனதை நடு
குறைசொல்லா வகையினிலே
குணங்களையும் நடு
நிறைவான வாழ்வுவர
நிம்மதியை நடு
மறைவான எண்ணங்களை
மனத்தைவிட்டே எடு !
வள்ளுவத்தைப் படிக்கின்ற
எண்ணமதை நடு
வாழ்வினிலே பெற்றோரை
மனமதிலே நடு
கண்ணியத்தில் உயர்ந்தோரை
கருத்தினிலே நடு
காலமெலாம் நினைக்கும்படி
வாழ்வினையே நடு !