வாராயோ தைத் திருநாளே

Vinkmag ad
வாராயோ தைத் திருநாளே
வழி பிறக்க வருவாய் தைத் திருநாளே
வலி போக்க தருவாய் வளத்தை நீயே!
போகியில் பொசுங்கட்டும் தீமைகள்
புது மஞ்சளென மணக்கட்டும் நன்மைகள்!
செங்கரும்புடன் தித்திக்கும் ‘தை’ மகளே
செங்கதிரோனுக்கு வணக்கம் சொல்லி வா!
உழைத்து களைத்த மாடுகளுக்கு
அலங்கரித்து அன்னமிட வா!
ஜல்லிக் கட்டில் மல்லு கட்டும்
காளையினம் தழைக்க வா!
ஏருக்கு பின்னன்றோ இவ்வுலகம்
ஊருக்கு உழைக்கும் உழவர் வாழ வா!
உழவுத் தொழில் செழிக்க வா
தமிழர் வாழ்வினிக்க வா!
நர்கீஸ்
அஜ்மான்.

News

Read Previous

எல்லோரும் பொங்கிநிற்போம் !

Read Next

தை

Leave a Reply

Your email address will not be published.