வாத்து

Vinkmag ad

வாத்து.🦆

வானத்தில் பறக்காத
பறவை நீ.

வம்சத்தோடு உறவாடும்
பெருமை நீ.

சண்டைப்போடாத
நட்பினம் நீ.

தண்ணீரில் நீந்தும்
படகு சவாரி நீ.

நீரிலும்,நிலத்திலும்
இறை தேடும்
உழைப்பாளி நீ.

நிலத்தில் நடைபழகும்
நாட்டியம் நீ.

அலகில் அழகுகொண்ட
அதிசயம் நீ.

குரலிலும் குதூகல
குழந்தை நீ.

சாதுவான பறவையில்
முதலிடம் நீ.

பட்டு பாதம் கொண்ட
பஞ்சு மெத்தை நீ.

நீண்ட கழுத்துக்கொண்ட
மயிலின் தங்கை நீ.

ஆயிரம் அதிசயம்
உன்னில் உண்டு.

சாது என்பதால்
உன்னை சாடுபவரும்
உண்டு.

வாத்துக்கு மடமை
சொன்ன மானிடா!
அந்த இனத்தை
காக்க வேண்டும்
நீயடா?

வேணு.தேன்மொழி.

News

Read Previous

சென்னையில் வெற்றிக்கலை சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்

Read Next

இல்லாதவர்க்கு உதவிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *