வஹியாய் வந்த வசந்தம்

Vinkmag ad

வஹியாய் வந்த வசந்தம்

(திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்)

தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி – 630 702

சிவகெங்கை மாவட்டம்

அலைபேசி : 99763 72229

மின்னஞ்சல் : mudukulathur.com@gmail.com

ஏவல், விலக்கல்

எதுவென்று காட்டுகின்ற

காவல் ரஹ்மானின்

கலைஞானக் கண்ணாடி !

பொய்யின் வேர்களைப்

பொசுக்க வந்த பொறி நெருப்பு !

மெய்யின் கரை சேர்த்து

மீட்க வந்த ஓர் துடுப்பு !

வெகு நாளாய் மானிடர்க்கு

வெகுமானம் தர எண்ணி

ரஹ்மான் உவந்தளித்த

நல்லருமை ரஹ்மத்து !

இருள் வழிக்கோர் மணி விளக்கு

இறைமொழியின் சரத் தொகுப்பு !

அருள் வேந்த னல்லாஹ்வின்

ஆணைகளின் உயர்தொகுப்பு !

சுடுபாலை மடியிருந்தும்

சுரந்து வந்த அமுதூற்று

அடடாவோ… அல்குர்ஆன்

அல்லாஹ்வின் நிஃமத்து !

சகலர்க்கும் சாந்திதரும்

சன்மார்க்கப் பயிர்வித்து !

யுகங்களில் தொலைந்திட்ட

சுகங்களைக் கண்டெடுத்து

புயங்களில் சூட்ட வரும்

புன்னகைத் தோழமைதான் !

திருக்குர்ஆன் வேதம்

சிந்திப்பீர் மானிடரே !

மறைகளுக் கோர் மகுடமாய்

மாயிறையோன் அருளியது !

எப்படி வாழ்ந்தால்

ஏற்றமென்று மானிடர்க்கு

அப்படியோர் வழியில் நம்மை

அழைத்துச் செல்லுகின்ற

மதிநா பாராட்டும்

மாண்பான நட்புறவு !

இதுதான் திருமறையின்

இனிப்பான நல்லுறவு !

ஏகயிறை அல்லாஹ்

எழுதி நமக்கனுப்பி வைத்த

மாகவிதைக் கடிதமிது !

மாண்புகளின் சுரங்கமிது !

வள்ளல்நபி நாதருக்கு

வாய்மைநெறி சீலருக்கு

அன்னியள்ளி இறையளித்த

அருள் நிதியாம்பொக்கிஷமே !

அரபியிலே பூத்தாலும்

அகிலத்தை ஆள்வதிது !

உறவுகளின் நெறியுரைக்கும்

உன்னத வேதமிது !

உம்மி நபியை

உலகோர்க்கு ரஸூலாய்

செம்மையாய் காணவைத்த

திருவேதம் புர்கானே !

உலகப் பொதுமறையாய்,

உள்ளத்தில் வாழ்மணியாய்,

நிலவும் திருமறைதான்

நேர்வழியின் கைகாட்டி !

எல்லோரும் கற்றிடலாம் !

எல்லோரும் உணர்ந்திடலாம் !

அல்லாஹ்வின் சுவனமிதில்

ஆனந்தம் கண்டிடலாம் !

( கவிஞர் மு. சண்முகம் ஆக இருந்து

கவிஞர் மு. ஹிதாயத்துலாஹ்வாகியவர் )

News

Read Previous

வாழ்த்து மடல்

Read Next

துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30 வ‌து ஆண்டு விழா

Leave a Reply

Your email address will not be published.