வழிவகுத்து நின்றிடட்டும்

Vinkmag ad
வழிவகுத்து நின்றிடட்டும்
  
  ( எம். ஜெயராமசர்மா ..  மெல்பேண் )
 
  பொங்கலென்று சொன்னாலே
  பூரிப்புவந்து நிற்கும்
  மங்கலமாய் நினைவுகளும்
  மனங்களிலே நிறைந்துவிடும்
 
  தங்களது வாழ்க்கையிலே
  தைபிறந்தால் வழிபிறக்கும்
  என்றுஎண்ணி யெல்லோரும்
  இன்பமுடன் பொங்கிநிற்பர்
 
  புத்தரிசி கொண்டுவந்து
  புதுப்பானை தனிலிட்டு
  எத்தனையோ எண்ணங்களை
  இனிப்பாக அதில்சேர்த்து
 
  கொத்தாக மலர்கொண்டு
  குத்துவிளக் கேத்தியங்கே
  எக்காலும் எம்வாழ்வில்
  இனிப்பென்றே பொங்கிடுவார்
 
   சண்டை ஒழியவேண்டும
  சஞ்சலங்கள் போகவேண்டும்
  சந்தோஷம் வாழ்வினிலே
  சந்தததும் வரவேண்டும்
 
எங்குமே எல்லோரும்
இன்னலின்றி இருப்பதற்கு
மங்கலமாய் தைப்பொங்கல்
வழிவகுத்து நின்றிடட்டும்
 
சங்கத் தமிழ்பாடி
சகலருமே பொங்கிநிற்போம்
எங்களது தமிழ்மொழியும்
ஏற்றமுற வேண்டுமென
 
மங்காமல் தமிழெங்கும்
மதிப்புயர வேண்டுமென்று
பொங்கிடுவோம் பொங்கலினை
புதுப்பொலிவும் வந்துநிற்கும்
 
சிங்காரத் தமிழினத்தின்
சிக்கலெலாம் போவதற்கு
சீரானவழி எல்லாம்
காட்டிடட்டும் தைப்பொங்கல்
 
மங்கலமும் பொங்கவேண்டும்
மனமெலாம் மகிழவேண்டும்
எங்குமே இன்பவெள்ளம்
ஈடின்றிப் பெருகவேண்டும்
 
பொங்கலோ பொங்கலென்று
புத்துணர்வுடனே பொங்கி
மங்களம் பாடிப்பாடி
மனமகிழ்வு கொண்டுநிற்போம்
 
  

 

News

Read Previous

இன்பம்

Read Next

உழவர்களின் உழைப்பை உளமார வாழ்த்துவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *