வலி

Vinkmag ad

வலி 

சாணிப்பால் ஊற்றி

சவுக்கால் அடித்தான்

என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்தால்

கட்டி வைத்து உதைத்தான்

என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என

பகடி செய்து ஏசினான்

என் அப்பனை உன் அப்பன்

‘உங்களுக்கென்னப்பா?

சர்க்காரு வேலையெல்லாம்

உங்க சாதிக்குத்தானே’-என

சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்

உன்னை அறியாத ஊரில் போய்

உன்னைப் பறையனென்று சொல்!

அப்போது புரியும் என் வலி !

– ராசை.கண்மணி ராசா 

தலித் முரசு: பிப் 2006

News

Read Previous

இயக்குநர் பிரம்மாவுடன் கலந்துரையாடல்

Read Next

கிராமப்புற இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *