வத்திக்கான் வானொலி சேவை வாழ்த்துக் கவிதை

Vinkmag ad

வானொலியின் தந்தை மார்கோணி அவர்களால் துவக்கபட்டு, திருத்தந்தையின்
புகழ்பாடி வாடிக்கன் நகரிலிருந்து தினசரி ஒலிக்கும் வத்திக்கான்
வானொலியின் 81ஆண்டு (பிப்-12.) சேவை வாழ்த்துக் கவிதை

அன்பின் கருணை அவணியில் தவழ
அனுதினம் பாடி  அலையினில் ஒலிக்கும் !
விண்ணில் வெளிச்சம் விடியலில் முளைக்க
விருந்தென நிகழ்ச்சி செவியினில் அளிக்கும்!
கண்ணில் மணியென  கருணை வாழ்வை
காட்டிடும் மகிழ்வு  கருத்தினில் திளைக்கும்!
மண்ணில் நேயம்  மலரச் செய்ய
மகிழ்வுச் செய்தி  மாறாது விளைக்கும்!

தந்தையர் சொன்ன தகவல் தந்து
தன்னிகர் வாழ்வை  தரணியில் கொடுக்கும்!
விந்தைய நிகழ்வாம் விவிலியக் கதையை
வாழ்வுத் தொடரென வகையெனப் படைக்கும்!
சிந்தையில் வைத்து செதுக்கி மகிழ
செழுமை நாடகம் சிறப்பென வடிக்கும்!
மந்தையில் பிறந்த மானுட தேவன்
மலையென போற்றும் மகிமை கிடைக்கும்

ஞாயிறு சிந்தனை நல்லது சொல்ல
நாளும் இரக்கம் நயம்பட உரைக்கும்
தாயினும் இணையது தமிழ்ப்பணி நிகழ்வை
தந்திடும் வகையோ தன்னலம் கரைக்கும்
காயினும் இனிக்கும் கனிநெல்லி போலே
கலந்தே சொல்ல  காலத்தால் நிலைக்கும்!
ஆயிரம் நேயரின்  ஆலய தெய்வம்
ஆண்டுகள் போயினும் அமுதென இனிக்கும்!

 
-கண்ணன்சேகர்.

News

Read Previous

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

Read Next

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *