மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் !

Vinkmag ad
மேதினமாய் மலருமிந்த பெருநாளில்  பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்  !
 
 
    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா   …… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

 
            உழைக்கின்றார் வாழ்வினிலே உயர்ந்தநாள்
            உழைப்பினுக்கு மதிப்பளிக்கும் உன்னதநாள் 
            அந்நாளில் தொழிலாளர் அனைவருமே
            அரைவயிறாய் கால்வயிறாய் அழுகின்றார்  !
 
            மேதினமாய் மலருமிந்த பெருநாளில்
            பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் 
            எங்கிருந்தோ வந்தவிந்த கொரனோவால்
            ஏக்கமுற்று வாடுகிறார் தொழிலாளர்   !
 
            ஊர்முழுக்கப் பரவிவரும் கொரனோவால்
            ஊனமுற்றுக் கிடக்கிறது தொழிலெல்லாம் 
            ஊதியத்தை எதிர்பார்க்கும் கூட்டமெலாம்
            உயிர்போகும் ஆபத்தை நெருங்குகிறார்  ! 
 
            முதலாளிக் கெதிராகப் போராடி 
            முன்னின்று எடுத்தார்கள் சுதந்திரத்தை 
            கொரனோவுக் கெதிராகப் போராடி
            கொடுந்துன்பம் எய்துகிறார் தொழிலாளர்  ! 
 
            ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்
            அனுசரணை முதலாளி பக்கமேயாம் 
            அலுப்பின்றி உழைக்கின்ற தொழிலாளர் 
            அவர்கண்ணில் பட்டுவிடல் அரிதேயாம்  ! 
 
             மேடையேறி தொழிலாளர் நலனுரைப்பார்
             மேடைவிட்டு கீழ்வந்தால் அதைமறப்பார் 
             தொழிலாளர் என்னாளும் துயரென்னும்
             வலையதனில் அகப்பட்டே  வதைபடுவார்  ! 
 
             என்னாளும் இன்னலுறும் தொழிலாளர்
             மேநாளில் சுதந்திரமாய் பேசிடுவார் 
             அந்நாளும் பேசாத நாளாக்க
             பொல்லாத கொரனோவும் வந்ததிங்கே  ! 
 
             மேடைபோட்டு மேதினத்தில் தொழிலாளர்
             மேலான பலகருத்தை முழங்கிடுவார்
             வாய்விட்டுக் கருத்துரைக்க வாய்க்கும்நாளும் 
             வாய்க்காமல் செய்ததிந்த கொரனோவும்   ! 
             

News

Read Previous

கொரோனா ராஜ்யம்

Read Next

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *