முஹர்ரமே வா முகமன் கூறுகிறோம்
முஹர்ரமே வா முகமன் கூறுகிறோம்
———————————————-
மூன்றாம் பிறையாய் வானின் மூலையில் முஹர்ரம் பிறந்தது
சாரைசாரையாய் மேகப் பொதிகள்
சாமரம் வீசி சாட்சியம் சொன்னது
புத்தாண்டு பிறந்தது புது வானில்
புது வசந்தம் தந்தது நம் வாழ்வில்
சூழ்நிலைகள் மாறிவரும் சூழலில்
சூழ்ச்சிகள் முறியடிக்க சூளுரைப்போம்
ஏழைகள் வாழ வழி செய்வோம்
எளியவர் வாழ்வில் ஒளி சேர்ப்போம்
கருணை நபி சொன்ன செய்தி
கடல் கடந்தேனும் கல்வி கற்போம்
வணிகத்தில் நியாயம் தவறோம்
வட்டியிலா வாழ்வியல் செய்வோம்
வள்ளல் தன்மை கையிலெடுப்போம்
வாழ்விழந்தோர்க்கு விளக்காவோம்
உறவுகளோடு ஒட்டி வாழ்வோம்
உள்ளங்கள் ஒன்றாய் இணைவோம்
மத ஜாதி இன மாச்சரியம் மறந்து
மண்ணில் புது மாற்றம் செய்வோம்
வஞ்சகர் தம் பொல்லாமை கண்டு
கிஞ்சுத்தும் மனம் தளறோம்
அஞ்சர்க என ஆணையிடுவோம்
நெஞ்சுரத்தால் நிமிர்ந்து நிற்போம்
நாளெள்ளாம் உழைத்திடுவோம்
நல்லவர் தம் வழி நடப்போம்
நாட்டுப்பற்றை நெஞ்சில் ஏந்தி
நாளைய பாரதம் நாம் படைப்போம்
மு. முகமது யூசுப். உடன்குடி