முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

Vinkmag ad

 

செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம்

பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர்

தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம்

தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத்

தடத்தில் செல்பவர் திருமலை மீரான் !

அந்தநாள் குயிலில் அறிமுக மாகி

இந்த நாள்வரை எழுதி வருபவர்

தேங்காய்ப் பட்டினம் புத்தன் வீட்டில்

பிறந்த மீரான் பிள்ளை ! இவரோ

மாங்கனி போலே என்றும் இனிப்பவர் !

முனைவர் பாவலர் நாவலர் ! இன்று

மணிவிழா காணும் மீரான் வாழ்கவே !

-குயில்மொழி

நன்றி :

குயில் மாத இதழ்

மார்ச் 2012

News

Read Previous

கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா

Read Next

சமவுரிமை மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *