முதியோர்
முதியோர் தினத்தில் முதியோரை நினைத்து….
நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்
….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ?
இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்
…இல்லமதில் இடுவார்கள்…..அறிவீரோ ?
கன்றுகளும் பசுதேடிச் செல்லுவதை அறியாமல்
…காலமது இளைஞர்கள் …..திசைமாற்றிக்
கொண்டுசெலும் நரகத்தை நோக்கியெனப் புரியாமல்
….கொன்றுவிடும் குணப்பண்பைக் …குழிதோண்டி !
வண்ணமுள நிலையோடு வட்டமிடும் பருவந்தான்
……வாலிபத்தின் முறுக்கோடு…. .குறும்பாக
எண்ணமெலாம் குழைத்திட்ட இன்பமதை நினைத்தாலே
………இப்பொழுது முதுமைக்கு ……வெறுப்பாக
கண்ணிமைக்கும் பரப்பில்தான் கட்டிவைத்தோம் நினைக்கின்ற
….காலமதின் சுவட்டின்கண் ……பதிவாக
.மண்ணுடைய சுகங்கள்தான் இப்பொழுது நிறம்மாறும்
….மண்ணிலேநீ மடிதல்தான்…….விதியாக
பள்ளிகளில் படித்திட்டக் காலநிலை அசைபோட்டால்
………..பக்குவமாய் மனத்தில்தான் ……ஒளியாகும்
துள்ளிவரும் அதன்முன்னே இம்முதுமை இருள்போக
………..தோல்வியாகிப் புதுத்தெம்பு …….வெளியாகும்
வெள்ளமென வழிகின்ற பாசமழை நனையாமல்
……….வீம்பெனவே கழிக்கின்ற ….பொழுதாகும்
உள்ளபடி விரக்திக்கு வித்திடுமே முதியோர்க்கு
……..உள்ளமெங்கும் வடுவாகிப்….. பழுதாகும்