முடிவு
முடிவு
இரா சத்திக்கண்ணன்
————
கானா சுருதியில்
தேவாரம்
தாரை தப்பட்டை
கூத்தாட்டம்
தலைவிரிகோலமாய்
குழுமி
நெற்றியிலும்
நெஞ்சிலுமடித்து
அழுது புலம்பும்
சோகம்
தயாராகும்
பனைஓலை
பாடையும்
பூமாலையும்
தெர்மாஸ்
பிளாஸ்கில்
சூடான காப்பி
வருவோர்கெல்லாம்
துக்கம்
விசாரிக்க
யதார்த்தமான
வரிகள்
என
எல்லாம்
ஒப்பந்தகாரரிடம்
ஒப்படைத்து
பணமானது
பாசமும்
முடிவும்
Tags: முடிவு