மழையில் நனையும் மாணவி
புத்தகம் கைகளில் குடையுடன்
படிப்பின்பால் அக்கறையால் பள்ளிக்குச் செல்லுகின்ற
குழந்தை வேகம் நடையுடன்
விடாமல் முயன்றால் விடியல்
பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான்
பாடம் சொல்லும் குடையில்
இப்படியாக:
இடிதரும் ஓசை போல இன்னலும் வருமே வாழ்வில்
துடித்துநீ தோல்வி கண்டு துவண்டிடும் வேளை இந்தப்
பிடிப்புடன் துணிவைக் கொண்டு பிடித்தவுன் திறனைப் போல
மடிந்துபோய் விடாத ஆசை மட்டுமே படிப்பின் மீதே!
-அதிரை கவியன்பன் கலாம்,