மழைத்துளி

Vinkmag ad

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?

 

கூட்டம் கூட்டமாய் கொள்ளையிட வரவில்லை

கொட்டி அளந்து குளிர்விக்க வருகிற மழைத்துளி!

 

எந்த இடத்தில் விழுவோம் என்று திட்டமில்லாமல்

எங்கும் எதிலும் இணைவோம் என்று சொல்கிற மழைத்துளி!

 

வானம்வழங்கிய கொடை நாங்கள் தாகம்தீர்க்கவந்தோமென்று

மண்ணில்விழுந்த மறுநொடியே தன்நிறம்மாறும் மழைத்துளி!

 

உயிர்கள் வாழ ஆதாரம் அதை உணர்ந்தவர் நாங்கள்

உடனடி சேவைப்பிரிவுபோல ஓடிவருகிற மழைத்துளி!!

 

தன்னலமேதும் எங்களுக்கின்றி இருப்பதெல்லாம் கொடுப்பதனால்

கர்ணனைமிஞ்சிய கர்வம் கொள்ளும் மழைத்துளி!

 

கடலில் விழுந்தபோதிலும் மீண்டும் ஜனனம் எடுத்தேனும்

மனிதஉயிர்கள் பயனுறவே மண்ணில்விழுந்திடும் மழைத்துளி!

 

பிறவியின் பயன் என்னவென்று பிறந்தவர் யாரும் சொல்லவில்லை!

மழையாய் துளியாய் பிறந்ததுவும் மகத்துவம் கண்டது மழைத்துளி!!

 

வானம்பொய்த்து போய்விட்டால் வையகம் வாழ்ந்திட வழியில்லை!

நுண்ணுயிர்வரையில் வாழ்வதற்கே வருக! வருக! மழைத்துளி!!

 

அன்புடன்

காவிரிமைந்தன்

News

Read Previous

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!

Read Next

முன்னணியில் மூவர்

Leave a Reply

Your email address will not be published.