மயிலிறகு மனசு

Vinkmag ad
என்
வயதினையொத்தவர்களின்
அம்மாக்கள்
அவர்கள் காலத்தில்
பதினாறு பதினேழு
வயதுகளில்
தன் கனவுகளை
துறந்தவர்கள்
ஆனால்
துறவிகளைப்போலில்லை
அவர்களின்
அம்மாக்களின்
அறியாமையினாலும்
அப்பாக்களின்
பிடிவாதங்களினாலும்
தன் ஆசைகளை
துறந்தவர்கள்
அதனால்
துறவிகளைப்போலில்லை
வீட்டின்
எளிமைகளினாலும்
தன் மனதை
துறந்தவர்கள்
ஆதலால்
துறவிகளைப்போலில்லை
தனக்குப்பின்னால்
பிறந்த தம்பி தங்கைகளுக்கு
அக்காக்களும்
இன்னுமொரு
தாயென்பதால்
தன் இலட்சியங்களை
துறந்தவர்கள்
எனவே
துறவிகளைப்போலில்லை
அப்பாக்களின்
கடமைகளிலொன்றான
திருமணத்தினாலும்
தன் உணர்வுகளை
துறந்தவர்கள்
ஆகவேதான்
துறவிகளைப்போலில்லை
என்
வயதினையொத்தவர்களின்
அம்மாக்கள்
அவர்கள் காலத்தில்
பதினாறு பதினேழு
வயதில் தன்
துறவுகளை
துறவிகளைப்போல்
விரும்பியேற்கவில்லை
ஆனாலும்
உள்ளுக்குள்
பக்குவமெனும்
ஞானம்பெற்றவர்கள்
வெளியில்
அமைதியெனும்
ஒளி சூழ்ந்தவர்கள்
அதனால்
அவர்கள்
துறவிகளைப்போலில்லை.
மயிலிறகு மனசு ஷிஃபானா

News

Read Previous

சிறுகதை

Read Next

பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *