மனிதா
மனிதா
*************
இதுபோன்ற ஊரடங்கு பார்க்கலையே
ஊரடங்கி கிடப்பதைக் கேட்கலையே
குறுகிய பார்வையால் பார்த்தாயே
ஆகாச பார்வையில் தோற்றாயே
வைரஸ் பேரும் கேட்டாயே
பற்ற வைத்தது யாருன்னு பார்த்தாயே
ஆடிய ஆட்டத்தை அறிவாயே
ஆட்டுவிப்பது எதுவென்று புரிவாயே
நீ நட்டு வச்சதை அறிவாயே
நீ நாடாமல் போனதை புரிவாயே
மோக வாழ்வையும் ரசித்தாயே
உயிருக்கும் உலையை வைத்தாயே
செய்யாத சேட்டைகள் செய்தாயே
சேதாரத்தை கண்டு மிரண்டாயே
சொந்தமில்லா மூச்சோடு பிறந்தாயே
சொந்தம் சொல்லி கூறும் போட்டாயே
இயற்கை தந்ததை கெடுத்தாயே
பஞ்ச பூதத்தையும் மிதித்தாயே
எச்சரிக்கை மணிகளை தவிர்த்தாயே
ஏளனமாய் இயற்கையை நினைத்தாயே
மதத்தோடு மனிதம் சேர்ப்பாயா?
மண்ணிடமும் மனிதம் பார்ப்பாயா?
சொல்லில் அன்பையும் கோர்ப்பாயா?
பகைமையை பறந்திட வைப்பாயா?
மனமே அனைத்தென்று உணர்ந்தாயா?
மனிதனாய் வாழ்ந்திட துடிப்பாயா?
இன்பம் எதுவென்று புரிந்தாயா?
இனியாவது வீட்டில் இருப்பாயா?
சிவமணி
Ruwais, அபுதாபி
(வத்தலகுண்டு)