மகிழ்ச்சி
மகிழ்ச்சி”
வண்ணக் கலவையான
வானவில் காணும்போதும்,
வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமடித்துப் பறக்கும்போதும்,
வகையறியாத ஒருஆனந்த
“மகிழ்ச்சி”எஞ்சியுள்ள பொருள்களை
இல்லாதோர்க்கு வழங்கையில்,
இதழ்விரிக்கும் புன்னகையில் இருக்கிறது எல்லையில்லாத
“மகிழ்ச்சி”பெண்மைக்கு மதிப்பளித்து,
உண்மையான அன்புகொடுத்து,
உயர்த்திச் சிறப்பிக்கையில்
உயிர்வாழ்கிறது அன்பான
“மகிழ்ச்சி”ஏரோட்டும் உழவனுக்கு
சீரானவாழ்வு கொடுத்து
நிறைந்திடும் மனதில்
இறைவனைக் காண்கிறது
இதயத்தில் “மகிழ்ச்சி”!வளம்நிறைந்த நம்நாடு
செழுமை பெற்றால்
மகிழ்ச்சி!
வறுமையொழிந்து நம்இந்தியா
வல்லரசானால்
மகிழ்ச்சி மகிழ்ச்சி!காரைக்குடி. பாத்திமாஹமீத்
ஷார்ஜா.
Tags: மகிழ்ச்சி