பொறுப்புணர்வோம் மாந்தர்களே
பொறுப்புணர்வோம் மாந்தர்களே
ஊஹானில் தோன்றி ,
உலகெங்கும் பரவி,
உலுக்கியெடுக்குதிந்த கொரோனா – பல
உயிர்கள் மடிந்ததய்யா வீணா .
கண்ணுக்குத்தெரியாமால்
கண்ணாமூச்சியாடி
கண்டபடி பரவியது கொரானா – பலரை
மண்ணுக்குள் புதைக்குதிந்தக் கொரோனா .
சீனாவில் தோன்றி,
சீற்றமுடன் பரவி
சீரழிக்குது இந்தக் கொரோனா .
கைகழுவ வில்லையென்னில்
கைநழுவி விடும் வாழ்க்கை
முகக்கவசம் இல்லையெனில்
முடிந்துவிடும் வாழ்க்கை .
தள்ளிநிற்க வில்லையெனில்
தத்தளிக்கும் வாழ்க்கை .
வீட்டிலிருந்து வெளியே வந்தால்
விட்டிலாகும் வாழ்க்கை .
ஊரடங்கைக் கடைபிடிக்கா
உன்மத்தர்களின் வாழ்க்கை
உயிரடங்கி ஒடுங்கிவிடும் .
உணர்ந்திடுதல் வேண்டும்.
நமக்கு வந்தால் ,இந்த வைரஸ்
பலருக்கும் பரவும்.
பரவுவதால் இவ்வுலகம்
பாழாகிப் போகும்.
பாழாகிப்போய் விட்டால்
இவ்வுலகம் நரகம் .
நரகமாவதைத் தடுக்க
நம்மால் தான் முடியும்.
அரசுகளின் ஆணைகளைக்
கடைபிடிக்கவேண்டும்.
காவல் துறை முயற்சிக்கட்குக்
கரம் கொடுக்கவேண்டும்
மருத்துவரும், செவிலியரும்
நமக்காக உழைக்கும்
மகத்துவத்தை நாமுணர்ந்து
மனந்திருந்த வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்களை
துதித்திடவும் வேண்டும் .
அருகிலுள்ள வறியவர்க்கு
அன்னமிடல் வேண்டும் -. அந்த
உன்னதப்பணி செய்பவர்க்கு
உதவிடுதல் வேண்டும் .
இயன்றவரை நிதியுதவி
செய்திடலும் வேண்டும்.
சுத்தம் , சுகாதாரம்
பேணிடுதல் வேண்டும்.
சட்டத்திற்குட்பட்டு
நடந்திடுதல் வேண்டும்.
எல்லையைக் காக்கின்றார்
ராணுவத்து வீரர் – நாம்
இல்லத்திலிருந்து நாட்டைக்
காத்திடுதல் வேண்டும் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
Tags: பொறுப்புணர் மாந்தர்