பொங்கல் வாழ்த்து

Vinkmag ad

பொங்கல் வாழ்த்து ;

 
தைத்திங்கள் பிறக்கிறது .
தைப்பொங்கல் வருகிறது .
தை ,தை எனக்குதித்து 
‘தை’ மகளை வரவேற்போம் .
 
உலகோர் பசி தீர்க்க 
உழைக்கின்ற உழவர்க்கு 
உற்சாகம் தருகின்ற 
உன்னத விழாவன்றோ !
 
ஏரோட்டி ,சால் அமைத்து 
நீர் பாய்ச்சி ,நாற்றுநட்டு  ,
களையெடுத்து , எரு இட்டு, 
தலையெடுத்த பயிரை
அறுவடை செய்தடுக்கி ,
அறுவடைமுடித்த வயலில் 
புத்தடுப்பு தானமைத்து  
புதுப்பானைப்  பொங்கலிட்டு 
புத்தாடை தானுடுத்து 
பொங்கிவரும் பால்கண்டு
பொங்கலோ பொங்கலெனக்    
குலவையிட்டுக் கொண்டாடி ,
ஆதவணைக்கும்பிட்டு 
ஆவினத்தைச் சீராட்டி ,
நன்றி நவிலும்  நாளே 
பொங்கல் எனும் நன்னாள் – இது   .
உழவர்களின் திருநாள் .     
 
ஊரார் பசிதீர்க்கும் 
உழவர்தம் துயர்தீர்க்க
உரிய விலைகொடுத்து 
உயர்ந்திடுவோம் அவர்நிலையை .
 
இடைத்தரகர் எனும் 
ஈனப்பிறவிகளின்  
கொட்டத்தைத் தானடக்கி 
கொள்ளையைத் தடுத்திடுவோம். 
 
நீர்நிலைகள் புனரமைத்து 
நீர்வளம் பெருக்கி பயிர் 
வீணாகும் நிலையை 
விரைந்து சரிசெய்வோம் .
இயற்கைப் பேரிடரால் 
இன்னல் விளைந்தக்கால் 
நம் கை கொடுத்து அவர்க்கு 
நம்பிக்கை அளித்திடுவோம் .
 
வில்லேருழவர்க்கும் ,
சொல்லேருழவர்க்கும் ,
எல்லோர் வயிற்றுக்கும்
நல்லேர்தான் ஆதாரம் .   
   
உழவுக்கும் , உழவர்க்கும் 
உழைப்புக்கும் வந்தனம் .
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
 
 

News

Read Previous

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!

Read Next

சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *