பொங்கலோ பொங்கல்

Vinkmag ad

வாய்க்கால் தண்ணீர் வந்திடும்

வாய்ப்பு மில்லை; பெய்திடும்

பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்

பேரா பத்தால் நெற்கதிர்

காய்த்து வந்தும் பொய்த்தது

காலம் தோறு மிந்நிலை

மாய்த்துக் கொள்ளும் மக்களோ

மங்கிச் சொல்லும் “பொங்கலோ”

பொங்க லன்று பொங்கிடும்

பொங்கற் சோறு போலவே

எங்கு மின்பம் தங்கிட

எம்வாழ்த் தாலே பெற்றிட

பங்க மில்லா வாழ்வினைப்

பற்றிப் போற்றி வாழ்ந்திட

அங்க மெங்கும் பொங்கிடும்

அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்

சோற்றில் கையை வைத்திட

சேற்றில் காலை வைத்திடும்

ஆற்றல் மிக்க மக்களை

ஆர்வம் கொண்டு வாழ்த்திடு

ஏற்றம் பெற்ற ஏரினை

ஏந்திச் சிந்தும் வெற்றியால்

மாற்றம் பெற்று முன்வர

மக்க ளெல்லாம் போற்றுவோம்!

-அதிரை“கவியன்பன்” கலாம், அபுதாபி

News

Read Previous

தமிழ்ப் பொங்கல்

Read Next

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *