பெருநாள் கொண்டாடுவோம் !

Vinkmag ad

 

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )

 

இல்லார் மகிழ இருப்போர் உதவ

பொல்லா தவரும் பொய்மை அகல

எல்லாம் வல்ல ஏக இறையே –

ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே !

இல்லைக் குறையே ! – இங்கு

யாவும் நிறையே !

 

இருந்தோம் நோன்பு, இளைத்தோம் மேலே !

எரிந்த மெழுகு வத்தி போலே !

அருந்த மறுத்தோம் அமுதங் கூட

அல்லாஹ் உன்றன் அருளைத் தேட !

எங்கள் அகமே – பே

ரின்பச் சுகமே !

 

வயிற்றுப் பசியை வசியம் போட்டு

வாய்க்கும் இட்டோம் மவுனப் பூட்டு !

பயிற்று வித்தோம் பசியாம் புலிக்கே

பக்குவப் புல்லைப் புசிக்கும் படிக்கே !

ஆற்ற லுடைய – இறை

அருளின் கொடையே !

 

பாவங் களுக்கோ இலையுதிர் கோலம் !

பக்தி களுக்கோ வசந்த காலம் !

யாவுங் கருணை இறையின் மூலம்

ஏற்றங் கண்டதே இந்த ஞாலம்

பண்பா டுவமே ! – பெருநாள்

கொண்டா டுவமே !

 

 

நன்றி :

மணிச்சுடர் நாளிதழ்

18/19 ஆகஸ்ட் 2012

News

Read Previous

வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்

Read Next

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

Leave a Reply

Your email address will not be published.