பூ பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்…!!

Vinkmag ad

படைத்தவன் படைத்த

பாமாலை

பாரெங்கும் பூத்திருக்கும்

பூஞ்சோலை

கருப்பையின் கதகதப்பு

அன்னையின் அரவணைப்பு

அத்தனையும் வாடாத பூ

மனைவியின் இதழ்

மலரும் சிரிப்பு

மாதுளையின் பூ

கன்னச் சிவப்பு

கவரும் ரோசாப் பூ

மழலையின்

மாசிலாப் புன்சிரிப்பு

மல்லிகைப் பூ

நண்பனின் நட்பு

நாளும் பாதுகாப்பு

அரிதாய்ப் பூக்கும்

குறிஞ்சிப் பூ

உறவுகள் என்பது

கதம்பப் பூ

அத்தனைக்கும்

ஆணிவேர் அன்பு

அரசியலார் அள்ளி வீசும்

வாக்குறுதி காகிதப் பூ

என்று மினிக்கும் இலக்கியம் போலவே

தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்

அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்

சுகந்தம் தருமே சுகம்.

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Attachments area

News

Read Previous

வளைகுடா வாழ்கை!

Read Next

இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *