பூவே

Vinkmag ad
பூவே
=============================================ருத்ரா
நள்ளிரவில்
சூடான கண்ணீரில்
உன் கன்னத்தில்
நான்
வழிந்தோடும்போது
தெரிகிறது
அது காதலென்று.
ஆனால்
பகலில்
என்னைக்கண்ட போது
ஏன் அந்த
நாணம் எனும்
சல்லாத்துணி கொண்டு
மூடிக்கொள்கிறாய்!
இந்தப் பூவைப்பார்!
பெண்ணே!
கொஞ்சமும் வெட்கம் இல்லாமல்
பட்டாம்பூச்சியோடு
உரசிக்கொள்ளுகிறது?

News

Read Previous

ஆங்கில “இயல்கள்”

Read Next

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *