புனித ரமலான் வாழ்த்துக்கள்
புனித ரமலான் வாழ்த்துக்கள்
புனித ரமலான் மாதம் வந்தது
மனித நேயம் மண்ணில் மிளிர்ந்தது.
நபிகள் வழியில் நடக்கும் இஸ்லாமியர்
நாளும் குர்- ஆன் தன்னை ஓதி
ஐந்து வேளை தொழுகை செய்து
பகல் முழுவதும் நோன்பிருந்து
நோன்பை முடித்து கஞ்சி குடித்து
நலிவுற்றோர்க்கு உதவிகள் செய்து
அறம் வளர்க்கும் மாதமிது .
அமைதி நிலவும் மாதமிது .
அனைத்து மதத்தினரும் வந்து
இஃப்தார் நோன்பில் கலந்திடுவார்
மதவேற்றுமைதனை மறந்து
மனிதநேயத்தைக் காட்டிடுவார்
மார்க்கம் கூறும் வழிதனையே
மானிடரெல்லாம் கடைபிடித்தால்
எல்லா வளமும் பெருகிடவே
அல்லா நமக்கு அருள்புரிவார்
அஸ் ஸலாமு அலைக்கும்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்