புத்தாண்டு வாழ்த்துக்கள்
பயங்களைப் போக்கியே ஜெயங்களை நல்கிய
ஜெய வருடம் இன்றோடு முடிகின்றது
உன்னதமாகவே உத்வேகம் காணவே
மன்மத வருடம் நாளை விடிகின்றது .
நேற்றைய துன்பங்கள் காற்றோடு போகட்டும்
வேற்றுமைகள் மறைந்து வெற்றிகள் குவியட்டும்
சித்திரை வந்தால் சிறார்களுக்கு விடுமுறை
சித்திரைத் திங்கள் ஆலயங்களில் திருவிழா
சித்திரைதன்னில் பொருட்காட்சிகள் வரும்
சித்திரை முதல் நாள் விஷுக்கனி காண்பர்
சித்திரை வந்தால் இத்தரை சுடுமே
சிந்திடும் வியர்வையால் நித்திரை கெடுமே .
சித்திரை முடிந்தால் வைகாசி வரும்
அத்தனை பள்ளிகளும் ‘வை காசு’ என்பர் .
சித்திரவதை தான் சிறு வருவாயினர்க்கு .
பங்குனி முடிந்து சித்திரை வந்தால்
மங்கையர் கழுத்தில் மாங்கல்யம் ஏறும்
மங்கள வாழ்வு துவங்கிடும் மாதம்
பொங்கிடும் மகிழ்ச்சி புது வாழ்வினிலே
சித்திரை மகளே , சித்திரை மகளே
முத்தமிழ் போற்றும் முத்திரை மகளே
அத்தனை சுகமும் அள்ளித்தருவாய் .
மன்மத வருடம் மனங்கவர் வருடம் .
நன்மதி கொண்டோர் நலமெலாம் பெறுவார் .
துன்மதி கொண்டோர் துயரமடைவர்
வான் மழை பொழிந்து வளம் பெருகட்டும்
கோன்முறை அரசால் குறை தீரட்டும்
விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகட்டும்
முதலாளிகளுக்கு லாபம் பெருகட்டும்
உழைப்பாளிகளுக்கு ஊதியம் உயரட்டும்
பாட்டாளிகளுக்கு பட்ட துன்பம் மறையட்டும்
வாழிய பாரத மணித்திரு நாடு .
வாழ்க தரணிவாழ் மாந்தரெல்லாம்
வாழ்க , வாழ்க தமிழ்ப் புத்தாண்டு .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
13.04.2015