புத்தக தினம் கவிதை
நூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த
****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன்
பாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும்
****படிப்பதில் இன்பம் கொண்டேன்
சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு
****சிறப்பான போதை நூலினத்தில்
கற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே
****காதலாய் நூலினத்தில் மாற்றியது
மூடிக் கிடந்தது நூலேடு! – கை
.. ****மெதுவாய்த் திறக்க முகங்கண்டேன்!
தேடித் தவித்தவன் பாலையிலே – ஓர்
****.தெள்ளிய . நீர்ச்சுனை கண்டதைப்போல்!
எத்தனை வண்ணம் நூலினத்தில்! – அவைகள்
.. *****இதுவரை ஏனெனைத் தீண்டவிலை?
புத்தம் புதிதாய் இன்றிருந்தும் – நிலை
.. ****புதிதிலை நித்தம் பரிச்சயமே!
சொல்லால் சுகம்பல ஊட்டிடவும் – புதுச்
.. ***சுருதியை நெஞ்சினில் மீட்டிடவும்
எல்லாம் முடித்தேன் எனும்போதும் – வே(று)
.. ****எதையோ தினந்தினம் காட்டிடவும்
விரலால் வரைந்தேன் நூலுடலில் – பக்கம்
.. ****விதவித மாக நெளிந்திடவே
குரலால் மொழிந்தேன் நூல்மொழியை! – கை
.. *****கொண்டு அணைத்தேன் நூலடலை
கண்ணால் நூலுடல் மேய்ந்திடினும் – நூல்
..*** காட்டும் அதிசயம் தீரவில்லை!
எண்ணா துறங்கும் கணமாயும் – எனக்கு
.. ****இன்பம் தருவன நூற்களே!
நூலோ அதன்பொருள் நுண்ணியதோ? – நான்
.. ***நுணங்கிடும் போதது நொய்ந்திடுமோ?
பாலோ தேனோ ஈடில்லை – இரவு
..**** பகலாய் பரவசப் படுத்திடுமோ?
சொற்கள் கற்பிக்கும் மௌனமவள்! – புதுச்
.. ****சுவையை கற்பதில் ஏற்றுபவள்!
பற்கள் பதியா தொருநிலையில் – இதழ்
..**** பதிக்கும் கலைபோல் பதிப்பவள்!
கண்டும் கேட்டும் உண்டுயிர்த்தும் – அவள்
.. ****கலையா எழிலை உற்றறிந்தும்
அண்டி அவளின் அரவணைப்பில் – மனம்
.. ****ஆழ்ந்து கிடக்க அலைபாயும்!
என்னவள்! நான்தான் இதழ்ச்சுகிப்பேன்! – முறை
.. ****எத்தனை ஆயும் இனிப்பெனக்கே!
பொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி – என்
.. ****பொறுப்பில் புதிதாய்த் துகில்கொடுத்தேன்!
“அதிரை கவியன்பன்” கலாம், அபுதாபி
முகவரி:
KALAM SHAICK ABDUL KADER
ACCOUNTANT
GRANITE CONSTRUCTION COMPANY
POB # 842
ABU DHABI, UAE
MOBILE 0508351499
—
KALAM
“ABUDHABI , UAE
http://gardenofpoem.blogspot.ae/