பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான்

Vinkmag ad

ஞானத் தலைநகர் கீழக்கரை வள்ளல், கொடை நாயகர்
பட்டத்து சுல்தான் முகம்மது வம்சத்தை சேர்ந்த
சங்கைக்குரிய பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களை
பாராட்டி வழங்கிய
ஒரு கவிதைப் பூ

அஸ்ஸ்லாமு அலைக்கும்,
அன்பிற்குரியோரே !
அகமெல்லாம் நிறைந்த ஆற்றல் உடையோரே !
பட்டத்து சுல்தான் வம்சத்து பௌர்ணமியே !
பௌத்திர மாணிக்க பட்டிணத்தின் நன் முத்தே !
மட்டில்லாப் புகழின் மாண்பிற்குரியோரே !
மனிதம் நேசிக்கும் மகத்துவமுடையோரே !
பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் உங்கள் முகவ்ரி,
எங்கள்
அகமெல்லாம் நிறைந்த அன்பின் முகவரி !
பசித்த வயிறுகளை பார்க்கின்ற பார்வைகளை
படைத்த ரப்பும் பரிவோடு பார்க்கின்றான் !
வணிகத்தில் ஈட்டும் லாபம் வரவிலும் சிறிதொதுக்கி
புனித நல் அமலுக்காகப் புன்னகையால் செலவழிக்கும்
இனியவருங்கள் ஈகை எந்நாளும் பேசப்படும். !
மனிதம் நேசிக்கவே நம்மாமறையும் போதிக்கிறது !
சங்கைக்குரியோரே ! உங்கள்
முன்னோர்கள் ஆலிம்கள் முதிர்ஞான நாதாக்கள் !
முன்னோர் வழிதானே பின் ஏரும் நடந்து வரும் !
கண்ணியத்தின் பிறப்பிடமே ! கல்பினிலே ஹக்கை வைத்து
எண்ணிச் செயல்படும் உங்கள் ஈகையினை போற்றுகிறோம் !
தென் காயல் பூபதிலே ! தீன் தோட்ட மாதுளையே !
மண்காயப் பொறுக்காத மழை வானப் புன்னகையே !
அல்லாஹ்வின் அருளோடும் அவன் வழங்கும் பரக்கத்தோடும்
எல்லா வளம் கண்டு இன்புற்று வாழியவே !
ஆமீன் ! ஆமின் ! யாரப்பில் ஆலமீன் !

ஆக்கம் :
தமிழ்மாமணி
ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ்,
இளையான்குடி

News

Read Previous

கொரோனா பரிசோதனை

Read Next

திருமணங்களில் பொய்யும், மொய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *