பி. ஆர். பந்துலு
26.07.2019 வெள்ளிக்கிழமை
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
இன்று இயக்குனர்,
பி. ஆர். பந்துலு-1911
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.
〰〰〰🎤🎤🎤〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதி, இயக்குனர் பி.ஆர்.பந்தலு படத்தில் இடம் பாடிய பாடல் ஒன்று.
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே..
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்தது
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.
திரைப்படம் : பழநி
〰〰〰🎤🎤🎤〰〰〰
🙏🏻கண்ணன்சேகர்