பிரார்த்திக்க கோரியவனாய் …
வாரம் ஒன்று கடந்திட்டு !
வானில் என்ன நடந்திட்டு ?!
எம்மை போல் – குடும்பம் காக்க
புறப்பட்டோர், குழந்தைகள்,
வயோதிகர் , இவர் அல்லது
உன்னய… நம்பி
ஊர்தியில் ஏறிட்டோர் – இந்த
பயணிகளின் நிலை என்ன ?
பரம் பொருளே, எம்மை படைத்தவனே
அறிவித்து விடு .
மாயமான பொருட்களின் மந்திர கோல்
உன்னிடம் உண்டு . மாசற்ற ஓர் இறையே
மறைத்ததின் அர்த்தம் என்ன ??
மானிடர் அவர்களின் நிலை என்ன ?!
மரணம் மானிடற்கு உண்டு.
பரிதாபபட்ட, பயப்பட்ட,
மர்மமான, கொடுரமான,
விவரிக்க இயலாத இன்ன பல
இன்னல் பட்ட மரணத்தில் இருத்தும் ,
காத்திடுவாய் எம்மயும் – எம் எல்லோரையும்.
கண்ணீர் பெருகும் கண்களுடன்..
எங்கள் `கல்பின்` (மனசு) அடி நாததுடன்.
கரங்கள் ஏந்துகின்றோம்..
மறைந்தவர்கள் எங்கள் சகோதர்கள் அன்றோ ….
மாநபி கற்றுதந்த பாடமும் இது வன்றோ….
பிரார்த்திக்க கோரியவனாய் –
(பி-கு) கடல் பயணம் போகாதான்-
கடவுள் பயம் அறியாதான் –
என்ற முது மொழிக்கு ஏற்ப்ப…
விமான, கடல் பயணம் செய்தவர்களுக்கு
இதன் பயம் என்ன வென்று புரியும்.