பாலைவனப் பறவை நாங்கள் (கவிதைச் சோலைப் பகுதிக்கு) கவிதை
கூட்டையும் கட்ட நீதான் கூடியே முயன்று சேர்க்கும்
பாட்டையும் பார்த்தால் நாங்கள் பாலையில் பறந்து சேர்த்து
நாட்டையும் விட்டு வந்து நல்வளம் பெருகச் செய்யும்
தேட்டமும் என்றன் கண்ணில் தெரிவதைச் சொன்னேன் இங்கே!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி