பாரதி
பாரதி
============================== ருத்ரா
பாரதி!
நீ முண்டாசா?
முறுக்கு மீசையா?
வீரம் சுடரும்
வேங்கை விழிகளா?
“மங்கிய தோர் நிலவினிலே…”
நீ கனவு கண்டதை
காதலோடு இசை பிசைந்து
நாங்கள் ருசித்தது உண்டு.
“சிந்து நதியின் மிசையினிலே”
இந்தியாவின்
ஒற்றுமைச்சித்திரம்
நீ தீட்டிக்காட்டியும்
தமிழ்
இங்கே சில சனாதனிகளிடம்
“மிலேச்ச பாஷையாக” அல்லவா
இருக்கிறது.
இவை
உனக்கு எப்போதும் அரண்
என்று
அப்போது முழக்கிச்சென்றாயே
ஆம்
அவை
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
எங்களுக்கு நல் அரண் தான்!
விடுதலை விடுதலை விடுதலை!
விடுதலை விடுதலை விடுதலை!!
============================== ========
Tags: பாரதி