பாபர் மஸ்ஜித்
பாபரி மசூதி
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர்
|
- அது டிசம்பர்
ஆறாம் நாள்
ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று இரண்டு!
அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது
ஆறாம் வகுப்பு!
அகவை எனக்கு பன்னிரண்டு!
- இந்தியாவில்
புகழ் மிக்க வரலாற்று சின்னங்கள்
கட்டப் பட்டிருந்ததை
அதுவரை பதிவு செய்த வரலாறு
முதன் முதலாய்
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம்
இடிக்கப் பட்டதை
அன்று கண்ணீரோடு பதிவு செய்தது !
- ஆம்
மதவெறி கோடறி பிடித்தது!
அது
பாபரி மசூதியை இடித்தது !
- ஆங்கிலேயரால் மண்ணில்
பிளவுப் படுத்தப் பட்ட தேசம்
ஆரியரால் தேச மக்கள் மனங்களில்
பிளவுப் படுத்தப் பட்டது !
- இராமர் பிறந்த இடத்தில்
கோயில் கட்ட புறப்பட வில்லை!
இராமரின் பெயரால்
கொலை செய்யப் புறப் பட்டார்கள்!
- பாவிகளால்
மசூதி இடிக்கப் பட்டது !
அப்பாவிகள்
பலரின் ரத்தம் குடிக்கப் பட்டது!
- ராமர் கோயில் இடித்தது
பாபர் என்று
கட்டுக் கதை விடுகிறார்கள் !
ஆனால்
பாபர் மசூதி இடித்தது
பஜ்ரங்தள் ,மற்றும் இந்துத்துவாக்கள்
காணொளியே இருக்கிறது!
கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்!
- சட்டப் பஞ்சாயத்தே
கட்டப் பஞ்சாயத்து ஆனது!
ஆக்கிரமிப்பு செய்தவனுக்கு நிலம் சொந்தம்
தீர்ப்பளிக்கப் பட்டது!
- அகழ்வாராய்ச்சிகளும்
அனைத்து சாட்சிகளும்
அங்கே தூக்கி வீசப் பட்டது !
அயோத்தியில் மசூதி இடம்தான்
“ராமர் பிறந்தது “
நம்பிக்கைதான் ஆதாரம் என தீர்ப்பு வாசிக்கப் பட்டது !
- தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்!
சத்ய மேவ ஜயதே
வாய்மையே இறுதியில் வெல்லும்!
*********************************************************************