நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!

Vinkmag ad

மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த

****மனத்தின் முன்னது சிறுதுரும்பு

மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல்

****மனத்தில் உறுதி வைக்க விரும்பு!

உயரம் என்பது மனத்தளவே-நீ

***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும்

துயரம் தடைகள் இவையெல்லாம்-உன்

****தோளின் தூசுகள்! தட்டிவிடு!

நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை

****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்!

பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப்

****பாருன்றன் கைகளில் பிடிபடட்டும்!

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

ஓ..முஹர்ரமே….

Read Next

மகளிடமிருந்து அப்பாக்களுக்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *