நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!
மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த
****மனத்தின் முன்னது சிறுதுரும்பு
மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல்
****மனத்தில் உறுதி வைக்க விரும்பு!
உயரம் என்பது மனத்தளவே-நீ
***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும்
துயரம் தடைகள் இவையெல்லாம்-உன்
****தோளின் தூசுகள்! தட்டிவிடு!
நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை
****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்!
பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப்
****பாருன்றன் கைகளில் பிடிபடட்டும்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி