நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 136-137 )
 
கதீஜா ஆச்சி
வாணிபம் பண்ணி
வருவாய் பெருக்க
தகுந்த ஒருவரைத்
தவித்துத் தேடினார்.
அந்தப் போதினில்
அருமை நாயகம்
குணங்களைக் குறித்தும்
வாணிபம் இயற்றும்
வல்லமை குறித்தும்
செவிகள் எங்கணும்
செய்திகள் விழுந்தன !
இலாபப் பங்கினில்
இரண்டு மடங்கு
அதிகம் தருவதாய்
ஆளை அனுப்பினார் !
முகம்மது மறையவர்
பெரிய தந்தையார்
காதைக் கடித்தார் !
சம்மதம் பெற்றபின்
சிரியா நாட்டிற்குச்
சிறகு விரித்தார் …
விற்பனை நடந்தது
விளைந்தது பெருமுதல்.
ஆனமுதல் அனைத்திற்கும்
போன செலவிற்கும்
பொங்கிய பொருளுக்கும்
கணக்கினை நாயகம்
கச்சிதமாய் நீட்டினார் !
கதீஜா –
களிப்புக் கடலைக்
குடைந்து கடந்து
துறைமுகம் சார்ந்த
கப்பலாய் மகிழ்ந்தார் !
நபிபெருமானுக்கு
அப்போது
கால் நூற்றாண்டு கண்டது !
நடுத்தர உயரம்,
வெள்ளைச் சுண்ணமும்
செம்பஞ்சுக் குழம்பும் …
கை குலுக்கிக் கொண்டால்
உண்டாகும் நிறம் தான்
மேனியின் வண்ணம் !

News

Read Previous

கலைஞருக்கு ஒரு இரங்கற்பா

Read Next

கலைஞர் மு. கருணாநிதி

Leave a Reply

Your email address will not be published.