நாகூர் HONEYபா!

Vinkmag ad

நாகூர்  HONEYபா!
=============================ருத்ரா

அழைக்கின்றார் அண்ணா
என்ற கணீர் தேன்குரலில்
திராவிட கீதம்
யாழ் மீட்டிய‌
மா மனிதர் திரு நாகூர் ஹனீபா
மறைந்ததற்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
எத்தனைப்பாடல்கள்?
அந்த குரல் சுவடுகளுக்கு
இறைவனின் கையெழுத்தும்
போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு.
இறைவனிடம் கையேந்தினேன் என்று
மக்கள் முன் உருகி வழிந்தார்.
காசுகள் குலுங்கும் ஒலிபோல‌
அந்த கைப்பறையின் ஒலியில்
ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.
HONEYபா  அவர்களின் தேன்குரலில்
தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை
இந்த தமிழ் மண் மறக்காது.

News

Read Previous

காலச்சாரல் மின்னிதழில் உண்மையான வியப்பூட்டும் செய்திகளை படித்து பயனடையுங்கள்.

Read Next

கிறிஸ்தவ திருச்சபை சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *