நதியிலாடும் நிலவு
நதியில் குளிர்ச்சியா
நிலவில் குளிர்ச்சியா
நதியியலையில் ஆடுவதால்
நிலவும் நதியும் சேர்ந்த குளிர்ச்சியா
எதில் குளிர்ச்சி எதனால்
எதற்குக் குளிர்ச்சி என்றே
புதிர் போட்ட வண்ணம்
புலம்பியது எண்ணம்
எதிரில் கண்டேன் தேவதைப் பெண்ணை
இவளின் வட்ட முகம் பொலிவா
இவளை வர்ணிக்கும் தமிழ்க் கவிதைப் பொலிவா
இவளால் கவிதைக்கு அழகா
கவிதையால் இவளுக்கு அழகா
நதியலையில் ஆடும் நிலவால்
நதியும் நிலவும் குளிர்ச்சிதனைக் கூட்டிடும்;
கவிதைமுகத்தில் பெண்ணும்
பெண்முகத்தில் கவிதையும் அழகைக் காட்டிடும்
-அதிரை”கவியன்பன்” கலாம், அபுதாபி
—