தொழுது நிற்போம் !
” அப்பாவை வாழ்த்தி அடிபணிந்து வணங்குகிறேன் “
தொழுது நிற்போம் !
( எம் .ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
பருகத் தருவார் அம்மா
பாடசாலை கூட்டிச் சென்று
படிக்க விடுவார் அப்பா
வேலை செய்து வேலைசெய்து
காசு சேர்த்து அப்பா
விருப்பம் உள்ள பொருளையெல்லாம்
விரும்பி
அம்மா எம்மை அடித்திட்டாலும்
அணைத்து நிற்பார் அப்பா
சும்மா கூட திட்டுதற்கும்
துணிய மாட்டார் அப்பா
இந்தமண்ணில் எம்மைக் காக்க
ஏற்ற தெய்வம் அப்பா
இன்ப துன்பம் எதுவந்தாலும்
ஏற்று நிற்பார் அப்பா !
படிக்க வேண்டும் என்றுசொல்லி
பாடா
படிப்பதற்கு உரிய தெல்லாம்
கொடு
உடுப்பு என்று கேட்டுவிட்டால்
கு
ஓடி ஓடி எந்தநாளும்
உழை
அடுத்தவர்கள் எம்மைத் திட்ட
பொறு
அசிங்கம் உள்ள காரியத்தை
பொறுமை காத்து பொறுமைகாத்து
பொ
பொல்லாத செயலைக் காணின்
பொ
பண்டிகைகள் என்று வந்தால்
பல உடுப்புத் தருவார்
உண்டு மகிழ பட்சணங்கள்
ஒழுங்காய் வாங்கித் தருவார்
தின்று நிற்கும் அழகைப்பார்த்து
சிரித்து நின்று மகிழ்வார்
பொங்கி வரும் பூரிப்பாலே
பொலிந்து நிற்பார் அப்பா !
அப்பா வரத் தாமதிதால்
அம்மா ஏங்கித் தவித்திடுவார்
அங்கு மிங்கும் ஓடியோடி
அவரைக் காணத் துடித்திடுவார்
அப்பா வீட்டில் இல்லயென்றால்
அமைதி அங்கே அமைந்துநிற்கும்
அப்பா வந்து சேர்ந்தவுடன்
அகமும் முகமும் மலர்ந்தேவிடும் !
அப்பாவும் அம்மாவும் அனைவருக்கும் துணையாவர்
அவரில்லா உலகமது ஆருக்கும் துணையாகா
ஒப்பாரும் மிக்காரும் உலகத்தில் அன்னைதந்தை
உளமிருத்தி உயர்த்திவைத்து உன்னதமாய் வாழ்ந்திடுவோம் !
தந்தையில்லா வாழ்வெமக்குத் தளர்வினையே தந்துவிடும்
நொந்துவிடும் போதெல்லாம் பந்தமுடன் வந்துநிற்பார்
இந்தப்புவி மீதினிலே ஏந்திநிற்கும் தந்தையினை
எல்லோரும் வாழ்வினிலே ஏற்றிநின்று போற்றிடுவோம் !
வலுவிழந்து போனாலும் வயதுசென்று போனாலும்
கிழடென்று மனமெண்ணி கீழாக எண்ணாமல்
நமதுடலை வளர்த்தெடுத்து நாமாக வாழுதற்கு
தமதுழைப்பை ஈந்தளித்த தந்தையினை தொழுதுநிற்போம் !
அப்பாவை அரவணைத்து அவர்பாதம் தொழுதெழுந்து
நித்தமுமே செய்வதுதான் சத்தியமாய் வாழ்வாகும்
கொண்டாட்டம் செய்துநின்று குவலயத்தில் இத்தினத்தை
குறைவாக்க நினையாமல் கும்பிடுவோம் அப்பாவை !
Tags: தொழு