தொழுது நிற்போம் !

Vinkmag ad
 ”  அப்பாவை வாழ்த்தி அடிபணிந்து வணங்குகிறேன் “
 
                     
 
             image1.JPG
 
                                 தொழுது நிற்போம் !
 
       ( எம் .ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) 

பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
பருகத் தருவார் அம்மா
பாடசாலை கூட்டிச் சென்று
படிக்க விடுவார் அப்பா
வேலை செய்து வேலைசெய்து
காசு சேர்த்து அப்பா
விருப்பம் உள்ள பொருளையெல்லாம்
விரும்பிக் கொடுப்பார் நாளும் !

அம்மா எம்மை அடித்திட்டாலும்
அணைத்து நிற்பார் அப்பா
சும்மா கூட திட்டுதற்கும்
துணிய மாட்டார் அப்பா
இந்தமண்ணில் எம்மைக் காக்க
ஏற்ற  தெய்வம் அப்பா
இன்ப துன்பம் எதுவந்தாலும்
ஏற்று நிற்பார் அப்பா !

படிக்க வேண்டும் என்றுசொல்லி
பாடாய்ப் படுவார் அப்பா
படிப்பதற்கு உரிய தெல்லாம்
கொடுத்து நிற்பார் அப்பா
உடுப்பு என்று கேட்டுவிட்டால்
குவித்து நிற்பார் அப்பா
ஓடி ஓடி எந்தநாளும்
உழைத்து நிற்பார் அப்பா !

அடுத்தவர்கள் எம்மைத் திட்ட
பொறுத்திடார் நம் அப்பா
அசிங்கம் உள்ள காரியத்தை
அழித்திடுவார் நம் அப்பா
பொறுமை காத்து பொறுமைகாத்து
பொறுத்து நிற்பார் அப்பா
பொல்லாத செயலைக் காணின்
பொங்கி நிற்பார் நம்மப்பா !

பண்டிகைகள் என்று வந்தால்

                     பல உடுப்புத் தருவார் 
               உண்டு மகிழ பட்சணங்கள்
                       ஒழுங்காய் வாங்கித் தருவார் 
               தின்று நிற்கும் அழகைப்பார்த்து
                         சிரித்து நின்று மகிழ்வார்
                பொங்கி வரும் பூரிப்பாலே
                       பொலிந்து நிற்பார் அப்பா !
 
              அப்பா வரத் தாமதிதால்
                  அம்மா ஏங்கித் தவித்திடுவார்
              அங்கு மிங்கும் ஓடியோடி 
                    அவரைக் காணத் துடித்திடுவார் 
              அப்பா வீட்டில் இல்லயென்றால்
                      அமைதி அங்கே அமைந்துநிற்கும்
                அப்பா வந்து சேர்ந்தவுடன்
                        அகமும் முகமும் மலர்ந்தேவிடும் !
 
         அப்பாவும் அம்மாவும் அனைவருக்கும் துணையாவர்
                         அவரில்லா உலகமது ஆருக்கும் துணையாகா
         ஒப்பாரும் மிக்காரும் உலகத்தில் அன்னைதந்தை
                       உளமிருத்தி உயர்த்திவைத்து உன்னதமாய் வாழ்ந்திடுவோம் !
         தந்தையில்லா வாழ்வெமக்குத் தளர்வினையே தந்துவிடும்
                      நொந்துவிடும் போதெல்லாம் பந்தமுடன் வந்துநிற்பார் 
         இந்தப்புவி மீதினிலே ஏந்திநிற்கும் தந்தையினை 
                      எல்லோரும் வாழ்வினிலே ஏற்றிநின்று போற்றிடுவோம் !
 
         வலுவிழந்து போனாலும் வயதுசென்று போனாலும்
                         கிழடென்று மனமெண்ணி கீழாக எண்ணாமல்
         நமதுடலை வளர்த்தெடுத்து நாமாக வாழுதற்கு 
                       தமதுழைப்பை ஈந்தளித்த தந்தையினை தொழுதுநிற்போம் !
          அப்பாவை அரவணைத்து அவர்பாதம் தொழுதெழுந்து
                       நித்தமுமே செய்வதுதான் சத்தியமாய் வாழ்வாகும் 
         கொண்டாட்டம் செய்துநின்று குவலயத்தில் இத்தினத்தை
                      குறைவாக்க நினையாமல் கும்பிடுவோம் அப்பாவை !
 
 
 
 
                     image1.JPG

News

Read Previous

இயற்கையோடு நாம் 2017

Read Next

வா.. நாமெல்லோரும் ஒன்றே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *