தொடு நல் வாடை

Vinkmag ad
தொடு நல் வாடை
======================================ருத்ரா இ பரமசிவன்.
வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு
வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம்
என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள்
அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும்
குவி இணர் கூர்த்த தண்புரை இதழும்
மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம்
உள்ளம் காட்டும் உவகை கூட்டும்.
கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல்
பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி
அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும்.
பண்டு துளிய நனை நறவு உண்ட‌
பூவின் சேக்கை புதைபடு தும்பி
சிறைக்க மறந்து சிறைப்படும் வாடை.
சிலம்பு இழீஇய நீர் இமிழ் தாமம்
நெய்தல் பிலிற்றும் வெண்ணகை அருவி
குளிர்ப்புகை தூவி திண்டிய செய்யும்
குலை உருவி கம்பம் படுக்கும்.
மின்னிய எயிற்றின் மிளிர் நகை ஆங்கு
சுருள்மலி வள்ளி இதழ் அவிழ்த்தன்ன‌
சூர்கொள களிக்குமென் திண்தோள் நெஞ்சு.

News

Read Previous

கைபேசிகளின் நன்மை, தீமைகள்!

Read Next

சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *