தேசம்
தேசம் திணறுகிறது
தீர்வுகாண திராணியற்று..
தேள் கொட்டிய
திருடர்கள் போல்
ஒளிய வைத்திருக்கிறது
விவசாயிகள் எழுச்சி.!
ஆட்சி செய்வதே
அம்பானி, அதானிகளுக்காக
என்றிருந்தவர்களை
அலற வைத்துள்ளது..
பதற வைத்துள்ளது
விவசாயிகள் எழுச்சி.!
அன்னமிட்டவன்
அடங்கிப் போவானென
அடக்க நினைக்காதே
அவனிடம்
அரசாங்கம்தான்
அடங்கிப் போகணும்..
அம்பானி, அதானிகளிடம்
அடைக்கலம் தேடும்
ஆட்சியாளர்களே!
நினைவில் கொள்ளுங்கள்..!
ஆயுள் முழுக்க
அன்னம் இடுபவனிடம்
அடங்கிப் போவது
அவமானம் இல்லை
அவனுக்குத் தரும்
வெகுமானமே..!
தண்ணீர் விட்டு
விளைவித்தவன்
காலம் காலமாய்
கண்ணீர் சிந்தினான்..
இப்போது
கண்கள் சிவந்திருக்கின்றன.
உழவன் சினந்தால்
வெளிப்படும் வெப்பம்
ஆணவம் அதிகாரம்
எல்லாத்தையும்
எரித்து சாம்பலாக்கிவிடும்.
இது
சாபமல்ல எச்சரிக்கை.
– முகநூலில் தோழர் எம்.சிவாஜி
Tags: தேசம்