தூத்துக்குடி உணர்த்தும் பாடம்
தூத்துக்குடி உணர்த்தும் பாடம்
ஆலை துவங்கியது தவறல்ல அம்மக்களுக்கு
வேலை வழங்கியதும் தவறல்ல , விஷமியர்கள் .
அறவழிப் போராட்டம் என்றுகூறி அரைவழியில்
மறவழியாய் மாற்றியதே மாபெரும் தவரன்றோ .
நன்முறையில் நடந்ததனை சுயலாபத்திற்காக
வன்முறையாய் மாற்றியது யார் செய்த சதியாலே
பொதுமக்கள் உடைமைகளை எரித்ததுவும் ,அழித்ததுவும்
பொதுச் சொத்துக்கு சேதம் விழைத்ததுவும் துன்மதியாலே .
தூத்துக்குடி மட்டுமின்றி , தமிழகம் முழுவதுமே
தொழிற்சாலை நடத்திடவே அஞ்சுகிறார் அனைவருமே .
வேலை கொடுக்கும் ஆலைகளை மூடச் செய்வார்
வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியதென்றரற்றிடுவார்.
வார்டு மெம்பெர், கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆளும்கட்சி ,எதிர்க்கட்சி , உதிரிக்கட்சிகள் மற்றும்
அரசு ஊழியர் முதல் அதிகார வர்க்கம் வரை
கையூட்டுப் பெறுவத்திலே , கைகோர்த்து நிற்கின்றார் .
மக்களுக்குப் பணம் கொடுத்து , மூளைச்சலவை செய்து
போராட்டம் தூண்டிவிட்டு , பிண்ணணிக்குச் சென்றிடுவார் .
அப்பாவி மக்களோடு , அக்கிரமக்காரர் கலந்து
அராஜகம் செய்துவிட்டு , திரை மறைவில் பதுங்கிடுவார்
சூழ்ச்சி அறியாத , சூதுவாதற்ற மக்கள்
இன்னல்கள் அனுபவித்து , இன்னுயிரும் நீந்திடுவார் .
அமைதியைக் குலைத்து , ஆட்சியைக் கவிழ்த்திடவே
அரசியல் நோக்கத்துடன் ஆர்பாட்டம் நடத்துவோரை
அடையாளம் கண்டு மக்கள் அண்டவிடாது செய்துவிட்டால்
துப்பாக்கியை எதிர்நோக்கும் , துர்பாக்கியம் மறைந்துவிடும்.
அன்புடன் ,
சேது சுப்ரமணியம்
Tags: தூத்துக்குடி பாடம்