திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்

Vinkmag ad

திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்

தமிழுக்குத் தரணியெங்கும் புகழ் சேர்க்கும்  வள்ளுவம்
தமிழ்த்தாய்க்கோர்  அணியாகத் திகழ்ந்திருக்கும் வள்ளுவம்
முக்காலத்திற்கும் ஏற்ற கருத்தமைந்த வள்ளுவம்
முப்பாலில் வாழ்விற்கு வழிகாட்டும் வள்ளுவம் .
ஈற்றடியில் அமைந்திட்ட , ஈடில்லா வள்ளுவம் .
போற்றத்தகு  பொக்கிஷமாய் பொதிந்திருக்கும் வள்ளுவம்.
எந்நாட்டவர்க்கும் ஏற்ற வகை அமைந்த வள்ளுவம் .
செந்நாப்போதார் அளித்த சீர்மிகு வள்ளுவம் .
தெள்ளு தமிழ் நடையினிலே  தீஞ்சுவை வள்ளுவம் .
அள்ளக்குறையாத அறிவுச்சுனை வள்ளுவம் .
எளிய நடையில் அமைந்த ஏற்றமிகு வள்ளுவம்.
அல்லவைதனையுரைத்து அகற்றச்சொல்லும் வள்ளுவம்
நல்லவற்றை எடுத்துரைத்து நடக்கச்சொல்லும் வள்ளுவம்.
உள்ளதை உள்ளபடி உரைத்து நிற்கும் வள்ளுவம்.
உள்ளமொன்றிக் கற்பவர்க்கு உயர்வு தரும் வள்ளுவம்
வள்ளுவம்தனை அளித்த வள்ளுவரைப் போற்றுவோம்.
வள்ளுவர் உரைத்தபடி வாழ்வதனை மாற்றுவோம்.
வள்ளுவர் தினம் என்பது வருடத்தில் ஒரு நாள் .
வள்ளுவம் கடைபிடித்தால் வாழ்வெல்லாம் திருநாள் .
அன்புடன்
சிலேடை சித்தர் சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

கலைந்த மேகம்…

Read Next

குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *