திருநெல்லை பதிகம்
திருநெல்லை பதிகம்
அரைமதி சூடிய அம்பல வாணன்
ஆடிய பாதன் அழகுரு வானோன்
அணிபரஞ் சோதி விரிசடைக் கடவுள்
அமரர்கள் நாதன் குமரனின் தாதை
வரையிடங் கொண்ட பிறையணி சோதி
வளந்தரு கொற்ற வாளிறை துணைவி
வானவர் தானவர் வணங்கிட நிற்போன்
வையம் அளந்த மாலவன் தங்கை
திரைகடல் ஆடை உடுத்தவள் வையத்
தினர்தினம் வாழத் திருவருள் புரிவோன்
தெண்கடல் வரைப்பில் குமரிதன் இடமாத்
தேர்ந்தவள் கூடல் திருநகர் ஆண்ட
திரிபுர சுந்தரி திருநெல்லை மாதின்
திருவடி பணிவர் தினம்புகழ் பெறுவர்
திருத்திகழ் சாலி வனத்துறை தேவி
திருவருள் நமக்கு வருவது தெரிவீர்
காப்பியக் கவிஞர் – நற்றமிழ் நாவலர்.நா.மீனவன்