தாய்மை

Vinkmag ad

தாய்மை

தாய்மை!

மண்ணுக்குள் ஊரும் ஈரமாய்

பெண்ணுக்கு வாய்த்த வரம்!

 

தாய்மை!

உறவுகளில் இதுவே இமயம்!

ஒப்பிட இயலா சிகரம்!

உண்மை மட்டுமே இதில் நிலவும்!

 

தாய்மை!

ஆண்டவனின் பிரசன்னம்!

அன்பும் அக்கறையும் ஈந்து

அனுதினம் காக்கும்!

 

தாய்மை!

நானிருக்கிறேன் பயம் வேண்டாம் எனும்

நம்பிக்கையின் ஆதாரம்!

பாலூட்டி தாலாட்டி பாராட்டி படியேற்றும்

அகரத்தின் ஆசான்!

 

தாய்மை!

உயரிய உரிமையின் அம்சம்! அதனால்

உலகில் நிலைக்கும் வம்சம்!

 

தாய்மை!

தியாகமும் இனிக்கும் அதிசயம்!

பிள்ளையை சுமப்பதும் தனிசுகம்!

குழந்தைகளோடு உலகம் சுருங்கும்!

குழந்தைகளுக்கென உலகளவு விரியும்!

 

தாய்மை!

இரவு பகல் அறியாது

இனிப்பும் உப்பும் சுவைக்காது!

ஈரைந்து மாதங்கள் கருவோடு

இறுதிவரை கருணை நெஞ்சோடு!

சுமந்து வாழும் சுமைதாங்கி!

 

தாய்மை!

மலடி எனும் அவப்பெயரை

போக்க வந்த தவப்பெயர்!

 

தாய்மை!

வாழவைக்கும் உயிர்க்காற்று! அதில்

வஞ்சகமில்லை! இது சத்தியக் கூற்று!

 

வலிவேதனை பொறுப்பதனால்

வாழும் பூமியும் தாய்மை கண்டது!

பேசாத மழலை சொல்லையும்

பெற்றவள் அறிவதனால்

பேசும் மொழியும் தாய்மை கொண்டது!

 

தாய்மை!

அடையாதவருக்கும் புரியும் அருமை!

அடையும்போது கணவர் கொள்வார் பெருமை!

 

கண்ணே மணியே என கவிதை பேசும்!

பிள்ளைகளோடு தினம் தானும் கற்கும்!

எல்லா உறவுகளாய் விளங்கும் தாய்மை!

எல்லையில்லாதது அதன் மேன்மை!

 

தாய்மை!

தனக்கென வாழாத நெஞ்சம்

தரணியில் எவரையும் மிஞ்சும்!

தாய்மையை மதிக்கும் உள்ளம்

நிச்சயம் வெற்றி கொள்ளும்!

 

–    நர்கிஸ் பானு

அஜ்மான் – அமீரகம்

News

Read Previous

மின்னூல் – காணாமல் போன நண்பர்கள் – தருமி

Read Next

தேவையா தண்டுவடம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *