தாயை விலக்கும் …….
தாயை விலக்கும் மகனை எண்ணி
தாயும் வேதனை
என் பாடல் வரிகளில்.
பாடல் மெட்டு:
” பொன்னை விரும்பும் பூமியிலே”
என்னை விலக்கல் ஏன்மகனே
உன்னை விரும்பும் தாயிவளே
உதயம் ஆன பருவம் முதலாய்
இதயம் ஆளும் ஓருயிரே!
கண்ணை விலக்கிக் காட்சியுண்டோ
என்னை விலக்க சாட்சியுண்டோ
நிதமும் பாலை அருந்திய மகனே
இதுவுன் கூலி ஆனதோ
பெற்ற வயிறும் நோவதையே
கற்ற அறிவும் கேட்கலையே
நாளை உனக்கும் பேரிடராய்
வேளை வருமே பேரனுடன்
இன்று புரியா வேதனையே
அன்று புரியும் நீதமுடன்
பணமும் போக்கும் நடத்தும் விதத்தில்
குணமும் போக்கி ஓடுவதேன்?
_பாடலாசிரியர்:
கவியன்பன் கலாம்
Tags: தாய்